மாத்தியோசி படத்தின் ரீலிசுக்காக காத்திருக்கிறேன். வேறு படங்களில் கமிட் ஆகவில்லை என்று நடிகை ஷம்மு கூறினார். நடிகை ஷம்முவுக்கு அஜித் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட வாய்ப்பு கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுபற்றி ஷம்முவிடம் கேட்டால், முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம்தான். ஆனால் அப்படி எந்த வாய்ப்பும் வரவில்லை. நான் இப்போதைக்கு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. மாத்தியோசி படம் எனக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் என நம்புகிறேன். எனவே அப்படத்தின் ரீலிசுக்காக காத்திருக்கிறேன், என்றார். அம்மணி ஷம்மு ஓய்வுக்காக பிறந்த நாடான அமெரிக்காவுக்கு செல்கிறாராம். ஓய்வுக்கு பிறகு ஜனவரி மாதத்தில்தான் மீண்டும் சென்னை வருவாராம்
உடல் எடையைக் குறைக்க சாப்பாட்டைக் குறைப்பார்கள், கடுமையாக உடற்பயிற்சி செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மாரத்தான் செக்ஸ் வைத்துக் கொண்டு தனது எடையைக் குறைக்கப் போவதாக கிளுகிளுப்பாக கூறியிருக்கிறார் பிரிட்டன் டிவியில் பிக் பிரதர் ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெற்றுள்ள ஷோபி ரீட்.
20 வயதேயாகும் இளம் கிளாமர் புயல்தான் ஷோபி. பிக் பிரதர் நிகழ்ச்சியில் இவர் வெற்றி பெற்றுள்ளார். ஷில்பா ஷெட்டி வென்ற அதே பிக் பிரதர் நிகழ்ச்சிதான்.
பிக் பிரதர் நிகழ்ச்சிக்காக வீட்டுக்குள்ளேயே அடைபட்டு நிறைய சாப்பிட்டதால் குண்டக்க மண்டக்க எடை கூடி விட்டாராம் ஷோபி. ஆனால் இதைக் குறைக்க தன்னிடம் வழி உள்ளதாக கூறுகிறார் ஷோபி.
ஷோபி கூறும் அந்த வழி படு வித்தியாசமானது - கிளுகிளுப்பானது. தொடர்ந்து செக்ஸ் உறவில் ஈடுபட்டு உடல் எடையைக் குறைக்கப் போகிறாராம் ஷோபி.
ஷோபி கூறுகையில், தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று தாறுமாறாக சாப்பிட்டு பெருத்துப் போய் விட்டேன். தற்போது நான் சைஸ் 10 க்கு போய் விட்டேன்.
நிறைய சாப்பிட்டேன். ஆனால் வேறு வழியில்லையே. இருந்தாலும் உடலைக் குறைக்க என்னிடம் எளிதான ஒரு வழி உள்ளது.
நிறைய செக்ஸ் வைத்துக் கொள்ளப் போகிறேன். அதற்குப் பிறகு பாருங்கள், தானாக உடல் குறைந்து போய் விடும் என்கிறார் படு கூலாக.
ஆனால் பிக் பிரதர் நிகழ்ச்சியில் இவருடன் பங்கேற்ற காதலர் கிறிஸ் டோன்னலியுடன் கண்டிப்பாக செக்ஸ் வைத்துக் கொள்ள மாட்டாராம்.
ஏனாம்..
அவன் அதற்கேற்ற ஆள் இல்லை. ரொம்ப சின்னப் பையனாக இருக்கிறான்...என்னோட சிஹுஹுவா நாய்க்குட்டி கூட கொஞ்சம் பெரிதாக இருக்கிறது... ஆனால்...(இதற்கு மேல் அவர் சொன்னதை எழுத முடியாத அளவுக்கு அது ஆ...)
பிரேசில் நாட்டைச் சேர்ந்த எனது நண்பன் ரோட்ரிகோ லோபஸைத்தான் செக்ஸர்சைஸுக்கு நான் தேர்வு செய்து வைத்துள்ளேன். எனது உடல் எடையைக் குறைக்க லோபஸ் பெரும் உதவியாக இருப்பார்.
எல்லோருக்கும் தப்பாக தெரிவது எனக்கு மட்டும் சரியாகவே தோன்றும். எப்பவுமே நான் அப்படித்தான் என்கிறார் ஷோபி.
2007 ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. சிறந்த படமாக தமிழில் வெளியான காஞ்சிவரம் தேர்வு செய்யப்பட்டது. பிரகாஷ்ராஜ், ஷம்மு ஆகியோர் நடித்த இந்த படம் நெசவாளர்களின் வறுமையை மையமாக கொண்டது. இதில் நடித்த பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த நடிகருக்கான போட்டியில் சக்தே இந்தியா படத்திற்காக ஷாருக்கானும் இருந்தாராம். ஆனாலும், இந்த போட்டியில் பிரகாஷ்ராஜே வெற்றி பெற்றுள்ளார். சிறந்த மாநில மொழி படமாக ஞான ராஜசேகரன் இயக்கிய பெரியார் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனர் விருதை ஏற்கனவே பலமுறை தேசிய விருதுகள் பெற்ற அடூர் கோபால கிருஷ்ணன் பெறுகிறார். இவர் இயக்கிய நாலு பெண்கள் படத்திற்காக இவர் தேர்வு செய்யப்பட்டார்.
தனக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது பற்றி பிரகாஷ்ராஜ் கூறியதாவது-
மிக மிக சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்ததை விட தமிழ் படத்திற்கு கிடைத்திருப்பது இன்னும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. டைரக்டர் பிரியதர்ஷனுக்கு என்னுடைய முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்தி படவுலகில் பிஸியாக இருந்த நேரத்தில் ஒருநாள் என்னை சந்தித்தார். நான் ஒரு தமிழ் படம் எடுக்கப் போகிறேன். அது நல்ல கதை. அந்த கதைக்கு நீதான் பொறுத்தமாக இருப்பாய். நீ சம்மத்தித்தால் உடனே அந்த படத்தை எடுப்பேன். இல்லையென்றால் அந்த திட்டத்தை தள்ளி போட்டு விடுவேன் என்றார்.
பிறகு அந்த கதையை என்னிடம் சொன்னார். நான் ஆடிப் போய்விட்டேன். பிரியதர்ஷன் என் மீது வைத்த அன்புக்கும் பாசத்துக்கும் நான் என்றும் கடமைப்பட்டு இருக்கிறேன். அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் திரு உட்பட படத்தில் பணிபுரிந்த அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன். தேசிய விருது கமிட்டிக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.
இந்த விருது எனக்கு மேலும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்து இருக்கிறது. இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்து இருக்கிறது. ஒரு நடிகர் முயற்சி செய்தால் விருது கிடைக்காது. நல்ல கதையும் இயக்குனரும் அமையும்போதுதான் விருது கிடைக்கிறது. எனவே நான் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பேன். இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.
சூட்டிங்கிற்காக கவர்ச்சி உடையில் வந்திருந்த நடிகை ஜெனிலியாவை தொட்ட ரசிகர்களுக்கு போலீசின் லத்தி அடி விழுந்தது. தமிழில் எதிர்பார்த்த அளவு வாய்ப்பு கிடைக்காததால் இந்தி சினிமா பக்கம் போயிருக்கிறார் நடிகை ஜெனிலியா டிசாசோ. ஷாகித் கபூருடன் அவர் நடிக்கவுள்ள புதிய படத்திற்கான சூட்டிங் மற்றும் போட்டோ ஷூட் மும்பையின் பந்த்ரா பகுதியில் நடைபெற்றது. நடிகைகள் சாதாரண உடையில் வந்தாலே ரசிகர்கள் திரண்டு விடுவார்கள். அம்மணி வேறு கவர்ச்சியான உடையணிந்து சூட்டிங்கிற்கு வந்திருந்தார். விடுவார்களா நம் மக்கள்? ஜெனிலியாவை பக்கத்தில் நின்று பார்த்து விட வேண்டும் என்று முண்டியடித்தனர். ரசிகர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதையறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் ரசிகர்கள் ஜெனிலியாவை நெருங்கி விட்டனர். சில ரசிகர்கள் எப்படியாவது ஜெனிலியாவை தொட்டுப் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் அவரை நெருங்கினார்கள். சிலர் ஜெனிலியாவை தொட்டுப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டனர். அதற்குள் போலீசார் அங்கு வந்து அவர்களை தடியடி கொடுத்து விரட்டினார்கள். இந்த சம்பவத்தால் சூட்டிங் பாதிக்கப்பட்டதுடன், அந்த பகுதியில் சில மணி நேரம் பரபரப்பும் நிலவியது.
தக்க அனுமதி பெறாமல் ஊட்டியில் இயக்கப்பட்டு வந்த ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நடிகர் நடிகைகளின் கேரவன்களை போக்குவரத்துத் துறையினர் கைப்பற்றினர்.
தமிழ் - தெலுங்கு மற்றும் இந்தியில் இயக்குநர் மணிரத்னம் இயக்கும் ராவணா (அசோகவனம்) படத்தின் படப்பிடிப்பு உதகையில் நடந்துவருகிறது.
ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், விக்ரம், கார்த்திக், ப்ரியாமணி என இந்தியாவின் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் ஊட்டியில் துவங்கியுள்ளது.
இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்துள்ள ஐஸ்வர்யா ராய், விக்ரம் போன்றவர்களுக்கு தனித்தனியாக கேரவன்கள் ஊட்டிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
இந்த கேரவன்களுக்கு உரிய வரி கட்ட படப்பிடிப்புக் குழு தவறிவிட்டதாக வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மோகன்ராமுக்குத் தகவல் வர, அப்பகுதி போக்குவரத்து ஆய்வாளருடன் அவர் ஆலோசனை செய்தார்.
பின்னர் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கே சென்று பார்வையிட்டனர் இருவரும். அப்போதுதான் அங்கிருந்த கேரவன் ஒன்றின் எஞ்சின் எண் திருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த வாகனத்தை கைப்பற்றி உதகைக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து சென்னையிலுள்ள போக்குவரத்து துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் கேரவன் வாகனங்கள் குறித்த சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஒரு கேரவன் வாகனம் இதேபோல முறைகேடு செய்யப்பட்ட எஞ்சின் எண்ணோடு இயங்கிக் கொண்டிருப்பது கண்டுபிடுக்கப்பட்டது. இவை தவிர மேலும் இரு கேரவன்களும் இதேபோன்ற முறைகேட்டுடன் இயங்கிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
இந்த 4 கேரவன்களின் மொத்த மதிப்பு ரூ. 2 கோடிக்கும் மேல் என்கிறார்கள். இவை அனைத்துமே ராவணா படப்பிடிப்புக்காக கொண்டு வரப்பட்டவை.
வாகனங்களின் என்ஜின் எண்களை திருத்துதல், வரி ஏய்ப்பு செய்தல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளின்படி இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மணிரத்னத்தின் படம் தொடர்புடைய பிரச்சினை இது என்பதால், சென்னையில் உயர் அதிகாரிகள் மட்டத்தில் தீவிர ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கேரவன்கள் இல்லாததால் படப்பிடிப்பு நடத்த முடியவில்லையாம். படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இதே பிரச்சினைக்காக கொடைக்கானலில் நடந்த ராவணா படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.
நடிகை மீனா பெங்களூரைச் சேர்ந்த கணினி பொறியாளரை மணக்கிறார். இவர்கள் திருமணம், வருகிற ஜுலை மாதம் 12-ந் தேதி திருப்பதியில் நடக்கிறது.
சிவாஜிகணேசன் நடித்த நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், மீனா. ஒரு புதிய கதை என்ற படத்தின் மூலம் கதாநாயகி ஆனார். தொடர்ந்து, என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக நடித்தார்.
ரஜினிகாந்த் ஜோடியாக எஜமான் படத்தில் நடித்த பின் நடிகை மீனா ஹீரோயின் ஆக பிரபலமானார். தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்தை அடைந்தார். தொடர்ந்து கமலஹாசன், பிரபு, விஜயகாந்த், முரளி, சரத்குமார், அர்ஜூன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளவர்.
மீனாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணமகன் பெயர், வித்யாசாகர். பெங்களூரில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில், பொறியாளராக பணிபுரிகிறார். இது, பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணம்.
நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீனா வீட்டில் நடந்தது. நெருங்கிய உறவினர்களும், நடிகைகள் சிலரும் கலந்துகொண்டார்கள்.
மீனா-வித்யாசாகர் திருமணம் வருகிற ஜுலை மாதம் 12-ந் தேதி, திருப்பதியில் நடக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி, ஜுலை 14-ந் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு பற்றிய புதிய படம் தயாராகிறது. இதில் பிரபாகரன் வேடத்தில் நடிக்கப் போகிறவர் யார் தெரியுமா… நம்ம ‘செல்லம்’ பிரகாஷ் ராஜ்தான்.
ஆனால் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார் என்பதை இப்போதைக்கு சொல்ல மறுத்துவிட்டார் பிரகாஷ் ராஜ்.
பிரபாகரன் உருவம் மற்றும் உடல்மொழியை ஓரளவுக்காவது பிரதிபலிக்கும் நடிகர் என்று பார்த்தால், சந்தேகமில்லாமல் பிரகாஷ்ராஜ் சரியான தேர்வுதான்.
ஏற்கனவே இருவர் படத்தில் முதல்வர் கருணாநிதி வேடத்தில் வந்தார். சிறந்த நடிப்புக்காக இவருக்கு மாநில அளவில் 18 விருதுகள் கிடைத்துள்ளன. 3 தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
பிரபாகரன் வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜை அணுகிய போது உடனே ஒப்புக்கொண்டாராம். இந்த வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவேன் எனும் பிரகாஷ் ராஜ், அவர் பிரபாகரன் கேரக்டருக்காக தனிப்பட்ட பயிற்சி எதுவும் எடுக்கவில்லை என்றார்.
இப்போதைக்கு பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து வரும் பிரகாஷ் ராஜ், அவருடன் பழகிய மனிதர்களைச் சந்தித்து அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் ஆர்வம் கொண்டுள்ளாராம்.