நடிகை ஜெனிலியாவை தொட்ட ரசிகர்களுக்கு போலீசின் லத்தி அடி

Thursday, June 11, 2009

சூட்டிங்கிற்காக கவர்ச்சி உடையில் வந்திருந்த நடிகை ஜெனிலியாவை தொட்ட ரசிகர்களுக்கு போலீசின் லத்தி அடி விழுந்தது. தமிழில் எதிர்பார்த்த அளவு வாய்ப்பு கிடைக்காததால் இந்தி சினிமா பக்கம் போயிருக்கிறார் நடிகை ஜெனிலியா டிசாசோ. ஷாகித் கபூருடன் அவர் நடிக்கவுள்ள புதிய படத்திற்கான சூட்டிங் மற்றும் போட்டோ ஷூட் மும்பையின் பந்த்ரா பகுதியில் நடைபெற்றது. நடிகைகள் சாதாரண உடையில் வந்தாலே ரசிகர்கள் திரண்டு விடுவார்கள். அம்மணி வேறு கவர்ச்சியான உடையணிந்து சூட்டிங்கிற்கு வந்திருந்தார். விடுவார்களா நம் மக்கள்? ஜெனிலியாவை பக்கத்தில் நின்று பார்த்து விட வேண்டும் என்று முண்டியடித்தனர். ரசிகர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதையறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் ரசிகர்கள் ஜெனிலியாவை நெருங்கி விட்டனர். சில ரசிகர்கள் எப்படியாவது ‌ஜெனிலியாவை தொட்டுப் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் அவரை நெருங்கினார்கள். சிலர் ஜெனிலியாவை தொட்டுப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டனர். அதற்குள் போலீசார் அங்கு வந்து அவர்களை தடியடி கொடுத்து விரட்டினார்கள். இந்த சம்பவத்தால் சூட்டிங் பாதிக்கப்பட்டதுடன், அந்த பகுதியில் சில மணி நேரம் பரபரப்பும் நிலவியது.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP